கொடைக்கானல்: சோலார் மின்வேலியில் சிக்கி மான் உயிரிழப்பு தோட்ட உரிமையாளர் கைது
Nov 26 2022 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வனத்துறையினரின் அராஜகப் போக்கிற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். அங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள், சாலை உடுமலைபேட்டைக்கு விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல சாலை வசதி, விவசாய நிலங்களைப் பாதுகாக்க மின்வேலி அமைத்து தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, செம்பரான்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிக்கி மான் ஒன்று உயிரிழந்தது குறித்து வனத்துறையினருக்கும் முறையாக தகவல் தெரிவித்தும், தோட்டத்தின் உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.