திருப்பூரில் உள்ள மருந்தகங்களில் மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு
Nov 26 2022 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைக்காட்சியில் வெளியான செய்தி எதிரொலியாக
திருப்பூரில் உள்ள மருந்தகங்களில், மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் எம்.எஸ். நகர், எஸ் வி காலனி பகுதிகளில் போதை பழக்கத்தால் 2 இளைஞர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய, ஜெயா ப்ளஸ் செய்தியாளர் குழுவினர் பாப்பாத்தி அம்மன் கோவில் பகுதியில் உள்ள முட்புதருக்கு சென்று இளைஞர்கள் பயன்படுத்திய போதை மருந்து பாட்டில்கள், போதை ஊசிகளை வீடியோ பதிவு செய்து களத்தில் இருந்து நேற்று நேரடியாக செய்தியை ஒளிபரப்பு செய்தனர். இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் குழுவினர், அப்பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.