வணிக வரித்துறை அதிகாரிகளின் செயலுக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு - வரும் 29ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Nov 26 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சோதனை கொள்முதல் என்ற பெயரில், வணிக வரித்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு எதிராக வரும் 29ம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனை என்ற பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வணிகர்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். சோதனை கொள்முதலான, 'டெஸ்ட் பர்ச்சேஸ்' என்ற பெயரால், வணிகவரித்துறை அதிகாரிகள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.