விழுப்புரம் விக்கிரவாண்டியில் பா.ம.க பிரமுகர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறல்
Nov 26 2022 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். கப்பியாம்புலியூரைச் சேர்ந்த மாவட்ட பாமக துணைச் செயலாளரான ஆதித்யன் என்பவர், கடந்த 24ம் தேதி இரவு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஏரி மண் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பியாம்புலியூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ராமு, விஷ்ணு, நாராயணமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் அவர்களை கைது செய்ய முடியாமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.