சென்னை தாம்பரம் அடுத்தகெளரிவாக்கம் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கொள்ளையன் சுற்றிவளைப்பு - நகைகள் மீட்பு
Nov 26 2022 12:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள நகைக் கடையில் அதிகாலையில் கொள்ளையடித்துச் சென்ற வடமாநிலத்தவரை ஒருசில மணிநேரத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த கெளரிவாக்கம் பகுதியில் உள்ள ப்ளூர் ஸ்டோன் நகைக் கடையில் அதிகாலையில் மர்மநபர் ஒருவர் நுழைந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கடை ஊழியர் ஜெகதீஷ் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நகைக்கடைக்கு வந்து ஆய்வு செய்த போது, பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடுபோனது தெரியவந்தது. உடனடியாக போலீசார், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது, அப்பகுதியிலுள்ள தேநீர் கடையில் அமர்ந்திருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளை நிகழ்வில் அவருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், கொள்ளையன் வீட்டு மொட்டை மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் மீட்டனர். நகைகள் திருடுபோன ஒருசில மணிநேரத்திலேயே கொள்ளையனை கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை பலரும் பாராட்டுகின்றனர்.