கன்னியகுமரி: மாத்தூர் தொட்டிப்பாலத்தில் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள் - அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுகோள்
Oct 6 2022 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறை காரணமாக சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலங்களுள் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில், விடுமுறையையொட்டி, சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், பாலத்தின் அடிப்பகுதியில் செல்லும் பரளா ஆற்றிலும் குளித்து மகிழ்ந்தனர். இருப்பினும், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதியில்லாத நிலை உள்ளது. அருவிக்கரை ஊராட்சி நிர்வாகம், அங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தும், சாலையோரத்தில் வாகனம் நிறுத்தும் அவலநிலைக்கு சுற்றுலாப்பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.