ராமநாதபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் : இலங்கைக்கு கடத்த விருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை
Oct 6 2022 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 100 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். மேலும் கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.