பழனியில் இரவு நேரத்தின்போது கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த சிறார்கள் - பொதுமக்கள் மத்தியில் பீதி
Oct 6 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவு நேரத்தில் சிறார்கள் கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட குறும்பபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில், அந்தப்பகுதியில் இரவு நேரத்தில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் சர்வ சாதாரணமாக நடந்து சென்றனர். செல்போன் மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆயுதங்களை எடுத்துச் செல்லும் சிறார்கள் யார் என்பது குறித்தும், எதற்காக ஆயுதங்கள் எடுத்து சென்றனர் என்பது குறித்தும் பழனி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.