வேதாரண்யத்தில் வீடுகளில் கட்டியிருந்த ஆடுகள் திருட்டு : சென்னையைச் சேர்ந்த இருவரை கைது செய்தது காவல்துறை
Oct 6 2022 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வீடுகளில் கட்டியிருந்த ஆடுகளை சொகுசு காரில் வந்து திருடிய சென்னையைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம், தோப்புத்துறை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளில் கட்டியிருந்த 22 ஆடுகள் காணாமல் போனதால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆடுகள் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தோப்புத்துறை சோதனைச்சாவடியில் சந்தேகப்படும்படியாக வந்த சொகுசு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 9 ஆடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனிடையே, காரின் ஒட்டுனர் உள்பட இருவர் தப்பி ஒடிய நிலையில், ஆடு திருடுவதற்கு உதவியாக செயல்பட்ட சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த காசிம், காசிநகரைச் சேர்ந்த மூர்த்தி பாபு ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காரில் இருந்த 9 ஆடுகளை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.