சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை : இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
Oct 6 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால், இதமான சூழல் நிலவி வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஆர்.கே. பேட்டையில் 33 மில்லி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டு பகுதியில் 20 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல், திருத்தணியில் 17 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 158 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.