திருச்சியில் பூட்டி இருந்த வீட்டில் 105 சவரன் தங்க நகை திருட்டு - உறையூர் போலீசார் விசாரணை

Oct 6 2022 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், வீட்டின் பூட்டை உடைத்து, 105 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கனிமொழி மற்றும் 3 குழந்தைகள், ராமலிங்க நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சீர்காழியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு கடந்த 1 ஆம் தேதி புறப்பட்டு சென்ற கனிமொழி, இன்று தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 105 சவரன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் நேரில் சென்ற போலீசார், தடயங்களை சேகரித்தனர். கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி பொன்னகரில் ஏற்கெனவே ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியதன் பரபரப்பு முடிவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது, திருச்சி நகர மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00