தேநீர் கடைக்காரர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, சிறப்பாக வளர்ப்பவர்களுக்கு பரிசு : தேநீர் கடைக்காரரின் பசுமைப்புரட்சி - பொதுமக்கள் பாராட்டு

Oct 6 2022 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்‍கோட்டையைச் சேர்ந்த தேநீர் கடைக்‍காரர் ஒருவர், பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வாடிக்‍கையாளர்களுக்‍கு மரக்‍கன்றுகள் வழங்கி வருவதுடன், அவற்றை சிறப்பாக வளர்ப்பவர்களுக்‍கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன், கேப்பரை உள்ளிட்ட இடங்களில் தேநீர் கடை நடத்தி வருபவர் சிவகுமார். கடந்த 2019ம் ஆண்டு கஜா புயலின்போது, தனது கடையில் கடன் வைத்திருந்த வாடிக்‍கையாளர்களின் தொகையை தள்ளுபடி செய்தார். மேலும், பச்சிளம் குழந்தைகளுக்‍கு தற்போது வரை இலவசமாக பால் வழங்கி வருகிறார். கஜா புயலின்போது மரங்கள் சாய்ந்து அழிந்ததால், அதை ஈடுசெய்யும் வகையில், பசுமைப்புரட்சி ஏற்படுத்த விரும்பினார்.

இதையடுத்து, தனது கடைக்‍கு வரும் வாடிக்‍கையாளர்களுக்‍கு சந்தனம், தேக்‍கு உள்ளிட்ட மரக்‍கன்றுகளை வழங்கி வருகிறார். இதுமட்டுமின்றி, தற்போது, தான் வழங்கிய மரக்கன்றுகளை வாங்கிச் சென்றவர்கள், அவற்றை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்காக, மரக்‍கன்றுகளை சிறப்பாக வளர்ப்பவர்களுக்‍கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00