கம்போடியாவில் கொத்தடிமைபோல் நடத்தப்படும் 400 தமிழர்கள் : வேலைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தப்படும் அவலம் - கம்போடியாவிலிருந்து தப்பிய இளைஞர் வேதனை
Oct 6 2022 10:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கம்போடியா நாட்டில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 400 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக, அங்கிருந்து தப்பி வந்த இளைஞர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கம்போடியாவில் நல்ல வேலை எனக்கூறி ஏராளமான தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தமிழர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் அங்கிருந்து தப்பினார். அவரை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீட்டு விமானம் மூலம் திருச்சி அழைத்து வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்போடியாவுக்கு தமிழர்களை வேலைக்கு அழைத்துச் சென்று, அடித்து துன்புறுத்தி மின்சாரம் மூலம் ஷாக் கொடுப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.