சென்னையில் பூர்வகுடி மக்களை தொடர்ந்து வெளியேற்றும் தி.மு.க. அரசு - சைதாப்பேட்டையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகள் அகற்றப்பட்டதால் கொட்டும் மழையில் மக்கள் தவிப்பு
Oct 6 2022 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசை மாற்று வாரியத்தின் குளறுபடியால் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு மட்டும் முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதுமுதல், பூர்வகுடி மக்களை சென்னையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சைதாப்பேட்டை காவாங்கரை பகுதியில், கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, பொதுப்பணித்துறையினர் வீடுகளை அகற்றினர். பின்னர் பெரும்பாக்கம் பகுதியில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. குடிசை மாற்று வாரியத்தின் குளறுபடிகள் காரணமாக, இந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு மட்டும் முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் சைதாப்பேட்டையில், பொதுப்பணித்துறை கட்டுமானம் நடைபெறும் பகுதிக்கு அருகில், கடந்த 20 நாட்களாக வெயிலிலும் மழையிலும் குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.