திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆடு, மாடுகளுடன் போராட்டம்
Aug 18 2022 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உழவு ஊர்தி, ஆடு மற்றும் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் 200 ஆண்டுகாலம் பயன்படுத்திவரும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், பாதையை மீட்டுத்தரக்கோரி பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் இந்த நூதன போராட்டம் நடத்தினர்.