வரும் 23-ம் தேதி ஊதிய உயர்வு குறித்த தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை
Aug 18 2022 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய உயர்வு குறித்த தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 6 கட்டங்களாக நடைபெற்ற போதும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினருடன் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.