வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் லஞ்ச வேட்டையை கண்டித்து இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Aug 18 2022 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லாரிகளின் சக்கரங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்மூடித்தனமான லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்க நிர்வாகிகள், தமிழக போக்குவரத்துத் துறையின் அராஜகத்தை கண்டித்து முதற்கட்டமாக இன்றுமுதல் 8 மாவட்டங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.