சின்னசேலம் பள்ளி மாணவி மரண வழக்கில் புதிய திருப்பம்- சிறையில் உள்ள ஆசிரியை கிருத்திகாவின் உயிருக்கு பள்ளி நிர்வாகிகளால் அச்சுறுத்தல் உள்ளதாக தந்தை புகார்
Aug 11 2022 8:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் சிறையில் உள்ள கணித ஆசிரியை கிருத்திகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை வேறு சிறைக்கு மாற்ற கோரிக் கோரி அவரின் தந்தை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆசிரியை கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ், விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி தாளாளர், செயலாளர் ஆகியோருடன் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகளான கிருத்திகாவிற்கு சிறையிலேயே பள்ளி நிர்வாகிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தனது மகள் கிருத்திகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை திருச்சி சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தந்தை ஜெயராஜின் மனுவை ஏற்றுக் கொண்ட விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி, மனுவின் மீதான விசாரணையை பிறகு மேற்கொள்வதாக தெரிவித்தார்.