செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி, குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து
Aug 11 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி, குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள், தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சென்னை மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணியைச் சேர்ந்த வைஷாலி, பக்தி குல்கர்னி, தானியா, ஹம்பி ஆகியோருக்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணியைச் சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால், சாத்விக், அதிபன் ஆகியோருக்கு தமது உளம்கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் டி.குகேஷ், நிஹல் சரின் ஆகியோர் தங்கப்பதக்கமும், அர்ஜுன் எரிகாசி வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும், மகளிர் பிரிவில் வைஷாலி, தானியாசச்தேவ், திவ்யாதேஷ்முக் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சின்னம்மா தெரிவித்துக்கொண்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டில் சாதனைப் படைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வைஷாலி, டி.குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும், தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று வாழ்வில் உயரிய நிலையினை அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.