அபாகஸ் பயிற்சி பெற்று மல்டி டாஸ்க்கில் சாதனை : திருப்பூரில் 9 வயது பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு
Jul 17 2022 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரை சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி, அபாகஸ் பயிற்சி பெற்றதன் காரணமாக, மல்டி டாஸ்க் எனும் 60 கணக்குகள் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
திருப்பூர் மங்கலம் அடுத்த சுல்தான்பேட்டில் வசித்து வரும் பிரித்திவிராஜ்-குமுதினி தம்பதியினரின் மகள் லக்ஷிதா, தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். லக்ஷிதா சிறு வயதிலிருந்தே வாலிபால், சதுரங்கம், கியூப் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பின்போதே அபாகஸ் பயிற்சி பெற்றதால், அதன் மூலம் மல்டிடாஸ்க் எனும் அதிக 60 கணக்குகள் செய்து சாதனை படைத்துள்ளார். இதற்காக இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கி உள்ளது. இதேபோல், பிரைன் விட்டா கேமில் முந்தைய சாதனையை முறியடித்து 18.6 வினாடிகளில் சாதனை நிகழ்த்தியுள்ளார். லஷிதாவின் சாதனையை சக மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.