கோவை: கோட்டைமேட்டில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல்
Jul 6 2022 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை, கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில், தேர்தல் விதிமுறைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் முறைகள், பிரச்சாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது.
பள்ளிக்கான 5 மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டு துறை, உணவுத்துறை, சுற்று சூழல்துறை ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெறும் முறை போலவே மாணவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு, விரலில் மை இட்டு, கணினி மூலம் வாக்கு பதிவு நடத்தப்பட்டது. இதில் பள்ளி 5-ம் வகுப்பு மாணவர்கள், வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இந்த தேர்தலில், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களித்தனர். கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் 8-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது போன்று தேர்தல் நடத்தப்படுவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.