பொள்ளாச்சியில் நகை வாங்குவது போல் நடித்து நகையை எடுத்து ஓட்டம் பிடித்த நபர்ன் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Jul 6 2022 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாச்சி கடைவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகை கடைகள், நகை உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்நிலையில் கடைவீதியில் உள்ள பிரபல சுப்புஅண்ணன் எனும் நகை கடைக்கு வந்த நபர், தனக்கு கடையில் உள்ள நகைகளை காண்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர் நகைகளை காண்பித்து கொண்டிருந்தபோது அவரை திசை திருப்பி 6 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். அந்த நபரை கடை உரிமையாளர் பொதுமக்களின் உதவியுடன் துரத்தி பிடித்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.