பலத்த சூறைக்காற்று காரணமாக கடலுக்கு செல்வதை தவிர்த்த ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் - துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தம்

Jul 6 2022 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்தது. இதை கருத்தில் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசால் வழங்கும் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டதால், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மறு உத்தரவு வரும் வரை நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டடுள்ளதால், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் அதிகமான விசைப்படகுகளும் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மேலும், அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00