தூத்துக்குடி: லோடு ஆட்டோவை வழிமறித்து ரூ. 10 லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Jul 5 2022 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் சாலையில் லோடு ஆட்டோவை வழிமறித்து, 10 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வடக்காத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், மாப்பிள்ளை யூரணியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் உள்ள பழைய இரும்புகளை, உடன்குடியில் உள்ள மனோகரன் என்பவரது உருக்கு ஆலையில் கொடுத்துவிட்டு, அதற்காக 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட செந்தில்குமார், லோடு ஆட்டோ மூலம் தூத்துக்குடி கிளம்பியுள்ளார். குலசேகரன்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் லோடு ஆட்டோவை வழிமறித்தனர். செந்தில்குமாரையும், ஓட்டுநர் சின்னத்துரையையும், லோடு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு 10 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.