சேலம்: சீலநாயக்கன்பட்டியில் வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள்
Jul 5 2022 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் பாடம் பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 220 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 12 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் நான்கு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. எனவே மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் அமைத்து தர வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.