திண்டுக்கல்: நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க முயற்சி
Jul 5 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நரிக்குறவர் இனப் பெண்ணை கேலி செய்த பிரச்சினையில் தட்டிக்கேட்ட பலர் தாக்கப்பட்டனர். இதனால் நரிக்குறவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்த நாயக்கன்பட்டியில் நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு குடியிருப்பு உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுற்றுலாத்தலங்கள், கோயில் வளாகங்கலில் பாசி, ஊசி போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடைக்கு சென்ற நரிக்குறவ பெண்ணை சிலர் கேலி செய்துள்ளனர். அவர்களை தட்டிக்கேட்ட நரிக்குறவ மக்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கும், தங்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்று குற்றம் சாட்டிய நரிக்குறவர் சமுதாயத்தினர் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்தனர்.