நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர் விபத்தில் சிக்கி பலி
Jul 5 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிளஸ்-2 படிக்கும் இரண்டு மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பந்தல் அமைக்க கொண்டு செல்லப்பட்ட கம்பில் தட்டியது. செட்டிக்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் சாலையில் உருண்டதால் எதிரில் வேகமாக வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர் இஷாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.