சென்னை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா குறித்த பணிகளில் அதிகாரிகள் மெத்தனம்
Jul 5 2022 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றக்கோரி மனு அளித்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தனத வேதனையை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா தொடர்பான பணிகள் முடிக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் இருந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த சுசீலா என்பவர், பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனு அளித்ததாகவும், இதன் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, பழங்குடியின சான்றிதழ் கிடைக்காததால் மனமுடைந்து 83 வயது முதியவர் ஜி.எம். பெரியசாமி, தற்கொலை செய்த நிலையில், கொண்டாரெட்டி மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், திருத்தணி அரசு மருத்துவமனையில் இருந்து பேரணியாகச் சென்று, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.