தூத்துக்குடி: தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை பலி
Jul 5 2022 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து, ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
விளாத்திகுளம் அருகே வாதாளகரை கிராமத்தைச் சேர்ந்த மாரிபாண்டி - மாரித்தாய் தம்பதியருக்கு, மகாலட்சுமி என்ற, ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் நிரப்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.