திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் : உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Jul 5 2022 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஆலயத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கும்பாபிஷேக விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். மஹா கும்பிஷேகத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.