சென்னை தாம்பரம் அருகே லாரிகளில் இருந்து டீசல் திருடும் கும்பல் - காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
Jul 5 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தாம்பரம் அருகே, லாரிகளில் டீசல் திருடும் கும்பல் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தாம்பரம் அடுத்த வண்டலூர் வெளிவட்டச் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி அருகே பழைய பொருட்களை வாங்கும் கடைகள் அமைந்துள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், வெளிவட்டச் சாலையில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை டீசல் திருடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாரிகளில் இருந்து, 25 லிட்டர் தண்ணீர் கேனில் டீசலை திருடி கடைக்கு கொண்டு செல்லும் இந்தக் கும்பல், உடனடியாக சிறிய வகை வாகனத்திற்கு விற்பனை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.