கிண்டி நட்சத்திர ஒட்டலில் ரூ.1.37 லட்சம் பேனா மாயம் : காவல்நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் புகார்
Jul 5 2022 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் எம்.பி. திரு.விஜய் வசந்த் பயன்படுத்திய, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பேனா திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் திரு.யஷ்வந்த் சின்ஹா கடந்த 30ம் தேதி சென்னைக்கு வருகை தந்து, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், எம்.பி. எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் சந்தித்தார். கூட்ட நெரிசலில் தனது விலைஉயர்ந்த பேனா மாயமானதால் அவர் அதிர்ச்சியடைந்தார். ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது பேனா மாயமாகிவிட்டதாக, கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.