ஆட்சி பெறுப்பை ஏற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு - கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்
Jul 5 2022 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திமுக அரசு, ஆட்சி பெறுப்பை ஏற்று ஒரு வடத்திற்கு மேல் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து பா.ஜ.க. வினர் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பா.ஜ.க வினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பலர் கலந்துகொண்டுள்ளர்.