காஞ்சிபுரத்தில் ஒரே மேடையில் ஆயிரம் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி சாதனை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்
Jun 30 2022 7:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே மேடையில் ஆயிரம் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர்.
குன்றத்தூர் அருகே மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நடைபெற்றது. சென்னையை சேர்ந்த பல்வேறு பரதநாட்டிய அகாடமியை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, பரதநாட்டியம் ஆடினர். இதனை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நோபல் புக் ஆப் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக அங்கீகரித்தது. மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.