பெரம்பலூர்: காளி வேடமிட்டவர்களிடம் முறத்தால் அடிவாங்கும் வினோத திருவிழா
May 20 2022 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே நடைபெற்ற முறத்தால் அடிவாங்கும் வினோத திருவிழாவில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான திரெளபதை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளி வேடம் அணிந்தவர்கள் முறத்தால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பஞ்ச பாண்டவர்கள், காளி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்தவர்கள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் காளி வேடமிட்டு வந்தவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் முறத்தால் அடி வாங்கினர். ஆண்கள் முறத்தால் அடி வாங்கினால் நோய்நொடி வராது என்பதும், பெண்கள் முறத்தால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். இதனால் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் முறத்தால் அடி வாங்கிக்கொண்டனர்.