பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்
May 20 2022 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 24ஆம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், விடைத்தாள் திருத்துதல், கட்டிட பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஜூன் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.