நெல்லை அருகே கல்குவாரியில் சிக்கியுள்ள 6-வது நபரின் உடலை மீட்கும் முயற்சி தோல்வி
May 20 2022 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அருகே கல்குவாரியில் சிக்கியுள்ள 6 வது நபரின் உடலை மீட்பதற்கு வெடிகள் வைத்து வெடிக்கச்செய்தபோதும் உடல் தெரியாததால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளம் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 11 மணிக்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். இதில் 2 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆறாவது நபரான ராஜேந்திரனின் உடலை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அதிகமான வெடி மருந்துடன் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் சென்று பார்த்தபோது ராஜேந்திரன் உடல் ஏதும் தெரியவில்லை. இதனால் இன்று காலையில் இருந்து வெடிமருந்து வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.