திருச்சி: விடுதலை செய்யக்கோரி ஈழத்தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
May 20 2022 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் தங்களை விடுதலை செய்யக்கோரி ஈழத்தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் போலி விசா மற்றும் சட்டவிரோதமாக இந்தியா வருகைபுரிந்தவர்கள், விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என 150 இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வழக்கு விசாரணையை அரசு மேற்கொள்ளாமல், கால தாமதப்படுத்தி வருவதுடன் இவர்களுக்கான தண்டனை காலம் முடிவடைந்தும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பபடாமல் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள 15 ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் இன்று முதல் காலவரையற்ற அறவழி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.