இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தல்
May 20 2022 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தரக் வலியுறுத்தி, ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவ பிரச்சனைகளை அரசிடம் கொண்டு சேர்க்க சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், மீனவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான மீனவர்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.