கரூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை
May 20 2022 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அருகே வைகைநல்லூர் ஊராட்சி வை. புதூர் தெற்கு பகுதியில் கடந்த 1995 ஆண்டு தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டப்பட்டு 27 வருடங்கள் ஆனதால் வீட்டுச் சுவரின் பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டும், மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையிலும் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இங்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, குடியிருப்புகளில் மராமத்து பணிகளை மேற்கொண்டு புதுப்பித்து தரும்படி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.