சேலம் அருகே கைத்துப்பாக்கி, வெடிகுண்டு தயாரித்த பட்டதாரி இளைஞர்கள் 2 பேர் கைது : யூ-டியூப் பார்த்து வீட்டில் வைத்து ஆயுதங்களை தயாரித்தது அம்பலம்
May 20 2022 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் அருகே கைத்துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரித்த பட்டதாரி இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி போலீசார் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதிலளித்ததால், அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் கைத்துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரதாப் என்பதும், யூ-டியூப் பார்த்து கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்ததும் தெரியவந்தது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.