மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததால் காணாமல் போன புதுக்கோட்டை மீனவர்கள் - உயிருக்கு போராடிய 4 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு
May 20 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில், காணாமல் போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மோகனசுந்தரம், யுவராஜா, ராஜ்குமார் குமார், ராஜா ஆகிய 4 பேரும் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடித் தளத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 5 நாட்களுக்கு மேலாகியும் 4 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணல்மேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், படகு கவிழ்ந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கரை திரும்பிய 4 பேரையும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.