மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததால் காணாமல் போன புதுக்கோட்டை மீனவர்கள் - உயிருக்கு போராடிய 4 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்பு

May 20 2022 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில், காணாமல் போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மோகனசுந்தரம், யுவராஜா, ராஜ்குமார் குமார், ராஜா ஆகிய 4 பேரும் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடித் தளத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 5 நாட்களுக்கு மேலாகியும் 4 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணல்மேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் 4 பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், படகு கவிழ்ந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கரை திரும்பிய 4 பேரையும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00