கடலூர் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ வைத்த மர்ம நபர்கள்

May 20 2022 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் ஆலப்பாக்கம் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை செயல்படாமல் உள்ளதால் ஆலையில் உள்ள இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி அதிகாலை இரும்பு தளவாட பொருட்களை கொள்ளையடிக்க மர்ம நபர்கள் வந்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கொள்ளை அடிக்க வந்தவர்களை தடுக்க துரத்திச் செல்லும் போது காவல் துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொள்ளை கும்பல் தப்பிச் சென்றது. இந்நிலையில், இன்று அதிகாலை கொள்ளை கும்பல் காப்பர் கம்பிகளை கொள்ளையடிப்பதற்காக ஆலையில் உள்ள ஓயர்களை தீ வைத்தனர். இதனால் ஆலையில் உள்ள ஒயர்கள் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தசம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00