நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர், பேருந்து மோதி உயிரிழப்பு : சிசிடிவி காட்சி வெளியீடு
May 20 2022 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பள்ளிபாளையம் அருகே உள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான விஸ்வநாதன் என்பவர், நேற்று தனது சொந்த வேலை காரணமாக, அண்ணா நகருக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.