விழுப்புரம் அருகே பிரியாணி அண்டாக்களை திருடி சென்ற மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்களை தேடும் போலீசார்

May 20 2022 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், ஒரு பாத்திர கடைக்குள் புகுந்து, பிரியாணி அண்டாக்களை 2 மர்ம நபர்கள் திருடி சென்றது, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

மரக்காணத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், குமார் என்பவர், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வருகிறார். நேற்று, கடையை திறந்து வைத்து விட்டு, அருகில் இருந்த வங்கிக்கு சென்றிருந்த அவர், சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு திரும்பினார். அப்போது, பிரியாணி அண்டாக்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் இருக்கும் சிசிடிவி பதிவை ஆய்வு செய்தார். அதில், இருச்சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், செல்போனில் பேசியபடி கடையை நோட்டம் விட்டதும், கடையில் யாரும் இல்லை என்பது தெரிந்ததும் கடைக்குள் புகுந்து 4 பிரியாணி அண்டாக்களை தட்டுகளுடன் தூக்கி சென்றதும் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00