ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

May 20 2022 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் சிப்காட் பகுதியில், கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 120 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் திடீரென தீ பிடித்துள்ளது. தீ மளமளவென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை கண்ட ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00