மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
May 20 2022 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோதை ஆற்றின் மேல்பகுதியில் செயல்பட்டு வரும் சுற்றுலா படகு சவாரியும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு சுற்றுலா மையத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பேரூராட்சியின் தடை உத்தரவால் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.