ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பணியாளரை எட்டி உதைத்த உயரதிகாரி : சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியீடு
May 20 2022 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பணியாளரை, கோயில் அலுவலகத்தில் வைத்து, அதிகாரி ஒருவர், காலால் எட்டி உதைத்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர், ஆண்டாள் கோயிலில் வாயிற்காவலராக பணியாற்றி வருகிறார். அவரை, கோயில் அலுவலகத்தில் பணியாற்றும் கணக்காளர் சுப்பையா என்பவர், அலுவலகத்தில் வைத்து, சக ஊழியர்கள் முன், காலால் எட்டி உதைத்தார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி, தற்போது வெளியாகி உள்ளது. ஆண்டாள் கோயில் உயரதிகாரிகள், பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.