கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை மறுநாள் முதல் வேலைநிறுத்தம் : நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தல்
May 20 2022 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நூல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவை , திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள், 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகியுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.