அற்புதம்மாளின் வைராக்கியமான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளதாக டிடிவி தினகரன் பேட்டி : மற்ற 6 பேரும் விடுதலையாக வேண்டும் என்றும் விருப்பம்
May 20 2022 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரறிவாளனின் தாயார் திருமதி.அற்புதம்மாளின் வைராக்கியமான போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், பேரறிவாளன் போன்று மற்ற 6 பேரும் விடுதலையாக வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் எனவும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், பேரறிவாளனின் விடுதலைக்கான வெற்றி அவரது தாயார் திருமதி.அற்புதம்மாளையே சாரும் என தெரிவித்தார்.